சென்னையில் நள்ளிரவில் கனரக வாகனங்களின் பேட்டரிகளை திருடிச் செல்லும் மர்ம நபர்களின்  சிசிடிவி காட்சி..!

0 3251

சென்னை அடுத்த பூந்தமல்லியில் நள்ளிரவில் கனரக வாகனங்களை குறிவைத்து மர்ம நபர்கள் 3 பேர் பேட்டரிகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களாக பூந்தமல்லி மற்றும் மாங்காடு பகுதிகளில் வீட்டிற்கு வெளியேயும் பேருந்து நிலையங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கனரக வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்துள்ளன. 

இந்நிலையில் ரங்கநாதபுரம், சக்தி நகர் ஆகிய பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில்,  இருசக்கர வாகனத்தில் வரும் 3 இளைஞர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்திலிருந்து பேட்டரியை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments